சனி, 18 ஜனவரி, 2020

தொண்டைமானாறு சுவரோவியங்கள்




நாட்டை அழகுபடுத்துவோம் என்ற ஜனாதிபதியின் புதிய திட்டத்திற்கு அமைவாக அதிகமான நகரங்கள் வண்ணமாகி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் வடமராட்சியின் தொண்டைமானாறு நகரச் சுவர்களையும் அவ்வூர் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அழகுபடுத்தி வருகின்றனர். 

"நண்பர்கள் வட்டம்" என்ற பெயரில் ஒன்றிணைந்து "ஊர்கூடிப் படம் வரைவோம்" என்ற கோசத்துடன் அவர்கள் அழகுபடுத்தி வரைந்த சுவரோவியங்கள் மறந்துபோன பண்பாட்டம்சம் சார்ந்தவையாகவும் மற்றும் புராண வரலாறு சார்ந்தவையாகவும் சமூக விழிப்புணர்வு சார்ந்தவையாகவும் அமைந்துள்ளன. அவற்றுள் மண்ணெண்ணெய் வண்டில், கிட்டிபுள் விளையாட்டு, சிலம்பாட்டம், இராணவன், உலகமயமாக்கலில் பூமியின் அழிவும் மனிதனின் அழிவும், இளைஞர்களின் முயற்சிகளுக்கு தடையாகும் சமூக வலைத்தளங்கள், மதுபாவனையின் தாக்கம் முதலானவற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.