பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ‘பேராசிரியர்’ தகுதிநிலையை அடைந்தமையிட்டு அவரது கிராமத்தில் கெளரவிப்பு நிகழ்வு ஒன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் கோயில் முன்றலில் 22.01.2011 மாலை 2.30 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வு வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர் திரு சி. ராஜா தலைமையில் இடம்பெற்றது.
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ‘பேராசிரியர்’ தகுதிநிலையை அடைந்தமையிட்டு அவரது கிராமத்தில் கெளரவிப்பு நிகழ்வு ஒன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் கோயில் முன்றலில் 22.01.2011 மாலை 2.30 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வு வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர் திரு சி. ராஜா தலைமையில் இடம்பெற்றது.
முன்னதாக விழா நாயகனை மாலையிட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறைவணக்கப்பாடலை செல்விகள் சமுத்திரா ஜீவானந்தன், யதுர்ஷா நவரத்தினராசா ஆகியோரும் வரவேற்புரையினை ஆசிரியர் க.தர்மதேவன் அவர்களும் ஆசியுரையை ஆலடிப்பிள்ளையார் ஆலய குரு அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. ஓய்வுபெற்ற அதிபர் திரு தா. வீரசிங்கம், GTZ நிபுணத்துவ ஆலோசகர் சுந்தரம் டிவகலாலா, யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச. சத்தியசீலன், யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா சின்னத்தம்பி, கரவெட்டிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் த. தவேந்திரராஜா, அகவிழி ஆசிரியர் தெ. மதுசூதனன், வவுனியா பட்டப்பின்படிப்பு கல்விநெறி இணைப்பாளர் பேராசிரியர் க. சின்னத்தம்பி, யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்தினர்.
நிகழ்வில் ‘கல்விச் சமூகவியல்’ என்னும் பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் நூல் அறிமுகமும் இடம்பெற்றது. அதனை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து விழா நாயகன் கெளரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ஏற்புரையினை நிகழ்த்தினார்.
ஏற்புரையின் முன்னதாக தான் இந்த நிலைக்கு உயர்வடைவதற்கு கொடிக்கால்களாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் உறவுகளை மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் தன் இளமைக்காலக் கல்வி, தன் தொழில், பட்டப்படிப்பு நிலைகள், இளைய சந்ததியினர் கருத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள், கிராம மக்களது அன்பும் ஒற்றுமையும் உயர்வும்; ஆகியன குறித்துப் பேசினார்.
நன்றியுரையினை திரு மா. ரவிரதன் நிகழ்த்தினார். உறவுகளும் கல்விச் சமூகமும் பெருமளவாகத் திரண்டிருந்த மேற்படி நிகழ்வு உற்சாகத்தையும் பெருமிதத்தையும் தந்தது.
நிகழ்வின் படங்கள்
(படங்களின்மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாகப் பார்க்கலாம்)
வாழ்த்துரைகளும் கெளரவிப்பும்
கொடிக்கால்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்
ஊரும் உறவுகளும் கல்விச் சமூகமும்