அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (29.01.2018) இடம்பெற்றது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் ஆலய அடியவர்களின் ஒரு கனவாகவே இராஜகோபுர அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முன்னொடுக்கப்பட்ட இக்காரியம் கிராம மக்களின்,புலம்பெயர்ந்து வாழும் கிராம உறவுகளின்ஒருங்கிணைப்பில் கைகூடியுள்ளது.
(படங்கள்: சு.குணேஸ்வரன்)