வியாழன், 23 டிசம்பர், 2010

ஆலடி ஐங்கரனின் உலாவருகை



அல்வாய் சாமணந்தறை ஆலடி ஐங்கரன் ஊர்தோறும் உலாவரும் காட்சி இது. திருவெம்பாவை இறுதிநாளன்று எங்கள் ஊர் காக்கும் ஆலடியான் ஒருமுறை எல்லோரையும் பார்க்க விரும்பினான். அவனின் வருகையில் சில காட்சிகள்.

(படங்களின் மேல் அழுத்துவதன் ஊடாக படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்)

ஆலடி ஐங்கரன் ஊர் காக்க வருகிறான்

வரவேற்க வீதியெங்கும் தோரணங்கள்

மங்கள வாத்தியம் வீதியெங்கும் ஒலிக்கிறது

ஐங்கரனைப் புடைசூழ்ந்து வரும் பக்தர்கள்


அருட்பார்வையின் அழகுதான் என்னே


வேண்டுதல்கள் நிறைவேற வீதிகளின் வீடுகள் தோறும் வந்தான்

ஆனைமுகனைத் தாங்கி நிற்கும் இளைஞர்கள்

மஞ்சள் வெய்யிலில் அழகாய்ச் சிரிக்கிறான்

பசுமை போர்த்திய கோலம் இது

உபசரிப்பும் உற்சாகமும்


படங்கள் :- சு.குணேஸ்வரன்

அல்வாய் மனோகரா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழா





பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்

அல்வாய் மனோகரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா 20.12.2010 திங்கட்கிழமை பி. ப 3.30 மணிக்கு முன்பள்ளி மண்பத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது மனோகரா முன்பள்ளிப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் திரு அ. விஜயநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு விசேட விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச சபைச் செயலாளர் திரு சி.வே குலநாயகம் அவர்களும்; அல்வாய் கிராம சேவையாளர் திரு வே. தியாகராசா அவர்களும் கலந்து கொண்டனர்.

பாலர்களின் கலை நிகழ்வுகள் கண்ணுக்கு விருந்தாகின. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிப்பும் மாணவர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நன்றியுரையை பெற்றார் சங்க செயலாளர் திருமதி செல்வமதி தர்மலிங்கம் நிகழ்த்தினார்.

முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறுவர்களை மகிழ்வித்தமை சிறப்பாக அமைந்தது.

மேற்படி நிகழ்வுகளில் இருந்து சில படங்கள்